Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM

தஞ்சாவூரில் 454 பேருக்கு கரோனா தொற்று :

மத்திய மண்டலத்தில் அதிகபட்ச மாக தஞ்சாவூரில் புதிதாக 454 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் 35, கரூர் 264, நாகப்பட்டினம் 392, பெரம்பலூர் 31, புதுக்கோட்டை 72, தஞ்சாவூர் 454, திருவாரூர் 129, திருச்சி 440 பேருக்கு நேற்று புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் திருச்சியில் 4, திருவாரூரில் 1, தஞ்சாவூரில் 3, பெரம்பலூரில் 1, நாகப் பட்டினத்தில் 2, கரூரில் 3 என மொத்தம் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x