தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி :

தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையம் சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கரோனா பிரி வில் பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணி யாளர்கள் மற்றும் பாதுகாவ லர்கள் ஆகியோருக்கு காஸ் சிலிண்டரிலிருந்து ஏற்படும் தீயை அணைப்பது, மின்கசிவால் ஏற்படும் தீயை அணைப்பது உள்ளிட்டவை குறித்து வீரர்கள் செய்து காண்பித்தனர். தொடர்ந்து, அனைவருக்கும் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண் டம் தீயணைப்பு நிலைய அலு வலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். தீயணைப்பு வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in