Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்க ளும் உழவுத் தொழிலை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.கந்தசாமி நேற்றுவெளியிட்ட அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த நீங்கள், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திருத்தவும், ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து உழவர்களையும், உழவுத் தொழிலையும் காப்பாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT