மது அருந்துவதை கைவிட வலியுறுத்தியதால் - ஊத்துக்குளி அருகே தந்தை, மகன் தற்கொலை :

மது அருந்துவதை கைவிட வலியுறுத்தியதால் -  ஊத்துக்குளி அருகே தந்தை, மகன் தற்கொலை :
Updated on
1 min read

ஊத்துக்குளி அருகே மது அருந்தும் பழக்கத்தை கைவிடும்படி குடும்பத்தினர் வலியுறுத்தியதால், தந்தை, மகன் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே காளிபாளையம் பெரியதோட்டத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி (80). இவரது மகன் காளியப்பன் (எ) குணசேகர் (51). இவரின் மனைவி சகுந்தலா (45). இவர்களுக்கு கவுதம் (23), தீபக் (21) ஆகிய இரு மகன்கள். சகுந்தலாவின் பெற்றோர் இறந்துவிட்டதால், அவருக்கு சொந்தமான எஸ்.பெரியபாளையம் ஊராட்சி கோழிக்காரன் தோட்டம் பகுதியிலுள்ள வீட்டில் காளியப்பன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். முத்துச்சாமி, காளியப்பன் இருவரும் அப்பகுதியில் சிறிய அளவில் பனியன் நிறுவனம் நடத்தி வந்தனர். தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 29-ம் தேதிஇரவு வழக்கம்போல மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளனர். இதனை சகுந்தலா மற்றும் அவருடைய மகன்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த முத்துச்சாமி, மகன் காளியப்பன் இருவரும்விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில், வீட்டிலேயேமுத்துச்சாமி உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காளியப்பனை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்ட சகுந்தலா, திருப்பூர்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் காளியப்பன் உயிரிழந்தார். இதுதொடர்பாக ஊத்துக்குளி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in