Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM
உதகை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. இந்த வழக்கில் தொடர்புடையதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் குன்னூர் கிளை சிறையிலும், மற்ற எட்டு பேர் ஜாமீனிலும் உள்ளனர். இந்த வழக்கு விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய வாளையாறு மனோஜ் குன்னூர் கிளைச் சிறையில் உள்ள நிலையில், கடந்த 28-ம் தேதி அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, சிகிச்சைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உதகை அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்ககில் குற்றம்சாட்டப்பட்டவர் என்பதால் பாதுகாப்பு கருதி கோவை அரசு மருத்துவ மனைக்கு அவர் மாற்றப்பட்டார். மேலும், குன்னூர் சிறைச்சாலையில் உள்ள சிறை காவலர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT