Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
மதுரை சிந்தாமணியில் டாக்டர் டி.திருஞானம் தொடக்கப் பள்ளி மாணவர்கள் சார்பில் குழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கும் வகையில் ‘வீதி தோறும் அறிவியல் கண்காட்சியும், பெற்றோர்களிடம் கரோனா குறித்த பயத்தை போக்க கரோனா விழிப்புணர்வு வீதி நாடகமும்’ நடத்திக் காட்டினர்.
பள்ளித் தலைவர் வி. சுரேந்திரபாபு தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்சி நிறுவன துணை முதல்வர் ராமராஜ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் க.சரவணன் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் சு.தினகரன் அறிவியல் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தின், மதுரை மாவட்ட உதவி திட்ட அலுவலர் என். திருஞானம் கண்காட்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகளை வழங்கினார். இதில், தமிழ்நாடு அறிவியல் கழக மாவட்ட இணைச் செயலாளர் சிவராமன், பேராசிரியர் ரஞ்சித்குமார், பள்ளிப் பொருளாளர் உதயகுமார், துணைத்தலைவர் ஜெயராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT