Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள 44 ஆயிரம் கோயில்களின் சொத்துகள் மற்றும் வருமானத்தை தணிக்கை செய்யக் கோரி தாக்கலான மனு மீதான விசாரணையை ஜூன் 1-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
கோவை ஈஷா யோகா மையம் சார்பில் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டின் கீழ் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகள் உள்ளன. இருப்பினும் பல கோயில்களில் ஒரு கால பூஜை கூட நடைபெறுவதில்லை.
சில கோயில்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை வருமானம் வருகிறது. 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் ரூ.10 ஆயிரத்துக்கு கீழ் வருமானம் வருகிறது.
இதனால் அனைத்து கோயில் களின் சொத்துகள் மற்றும் வரு மானத்தைத் தணிக்கை செய்ய வேண்டும்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து சமய அறநிலையத் துறைக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்க வில்லை.
எனவே, தமிழகத்தில் உள்ள இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 44 ஆயிரம் கோயில்களின் சொத்துகள், வருமானத்தை தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர் வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையை ஜூன் 1-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT