Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

டிஆர்இயூ, மார்க்சிஸ்ட் கட்சியினர்மே தினக் கொண்டாட்டம் :

மதுரை

மதுரை கோட்ட டிஆர்இயூ சார்பில் மே தினத்தை முன்னிட்டு மதுரை ரயில் வண்டிகள் பராமரிப்பு நிலையத்திலும், ஓடும் தொழிலாளர் பதிவு மையத்திலும், மதுரை சங்க கட்டிடத்திலும் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில், மத்திய சங்க துணை பொதுச்செயலாளர் திருமலை அய்யப்பன், கோட்டச் செயலாளர் சங்கரநாராயணன், உதவி கோட்ட செயலாளர் சரவணன், பொருளாளர் சிவக்குமார், ஏஎல்ஆர்எஸ்ஏ சங்க தலைவர் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் நடந்த கூட்டத்தில், ரயில்வே ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரோனாவால் இறக்கும் ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் கட்டாய கரோனா தடுப்பூசி, கடந்த ஓராண்டாக பணிபுரியும் தற்காலிக மருத்துவப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x