Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
நாமக்கல்: குமாரபாளையத்தில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை சைல்டு லைன் அமைப்பினர் தடுத்து நிறுத்தினர்.
கோவையைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் பிரபு (29). இவருக்கும் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தகவல் அறிந்த சைல்டு லைன் நிர்வாகி பெலிக்ஸ் அருள்ராணி, விஏஓ முருகன் மற்றும் போலீஸார் பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும், பெண்ணுக்கு 18 வயது ஆகாமல் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். மீறி திருமணம் செய்தால் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையேற்று திருமணத்தை நிறுத்திக் கொள்வதாக பெண்ணின் பெற்றோர் தெரிவித்தனர். எனினும், நாளை (மே 3) பெண்ணை நாமக்கல் சைல்டு லைன் அலுவலகத்திற்கு அழைத்து வரவேண்டும் என பெண்ணின் பெற்றோருக்கு அறிவுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT