Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8
மணிக்குத் தொடங்குகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் சித்தோடு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியிலும், கோபி, பவானிசாகர் தொகுதி வாக்குகள் கோபி கலை அறிவியல் கல்லூரியிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்குகிறது.
8 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்குகள் எண்ணிக்கை தலா 14 மேஜைகள் என 112 மேஜைகளில் நடைபெறவுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 23, ஈரோடு மேற்கு தொகுதிக்கு 29, மொடக்குறிச்சி தொகுதிக்கு 24, பெருந்துறை தொகுதிக்கு 24, பவானி தொகுதிக்கு 24, அந்தியூர் தொகுதிக்கு 22, கோபி தொகுதிக்கு 25, பவானிசாகர் தொகுதிக்கு 27 சுற்றுகள் என 198 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
ஈரோட்டில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 128 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பெருந்துறை தொகுதியில் அதிகபட்சமாக 25 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக பவானிசாகர் தொகுதியில் ஆறு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT