Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது :

தென்காசி: புளியங்குடி அருகே உள்ள நெல்கட்டும்செவல் பகுதியைச் சேர்ந்தவர் சிங்கத்துரை (22). இவர் மீது, மணல் திருட்டு, பள்ளி மாணவர்களை தாக்கியது உட்பட 4 வழக்குகள் புளியங்குடி காவல் நிலையத்தில் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மணல் திருட்டு வழக்கை விசாரிக்கச் சென்ற போலீஸாரை கொலை செய்ய முயன்றதாக சிங்கதுரையை புளியங்குடி போலீஸார் கைது செய்தனர்.

எஸ்பி சுகுணாசிங் பரிந்துரையின் பேரில், சிங்கதுரையை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x