Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு :

தென்காசி: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரைச் சேர்ந்தவர் ரத்தினசாமி (42). இதே பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (48). இவர்கள், அப்பகுதியில் உள்ள அரிசி ஆலையில் பழைய கட்டிடத்தை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுவர் இடிந்து விழுந்தது. இதில் இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

ரத்தினசாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று ரத்தினசாமி உடலை மீட்டனர். பலத்த காயம் அடைந்த சரவணன் மீட்கப்பட்டு, தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து பாவூர்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x