திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதியில் - அதிகபட்சமாக 29 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் : குறைந்த சுற்றுகள் கொண்ட போளூர் மற்றும் வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திருவண்ணா மலை தொகுதியில் அதிகபட்சமாக 29 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன. குறைந்த சுற்றுகள் கொண்ட போளூர் மற்றும் வந்தவாசி தொகுதி முடிவுகள் முதலில் தெரிய வாய்ப்புள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடை பெற்றது. 8 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று (2-ம் தேதி) எண்ணப்படவுள்ளன.
திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ஆரணி அடுத்த தச்சூர் அண்ணா பொறியியல் கல்லூரி என 2 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது.
400 வாக்குச்சாவடிகள்
திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியில் 400 வாக்குச்சாவடிகள் உள்ளதால், 29 சுற்றுகள் எண்ணப்படவுள்ளன.
வாக்கு எண்ணிக்கை சுற்றுகள்
தபால் வாக்குகள்
குறைந்த சுற்றுகள் கொண்ட போளூர் மற்றும் வந்தவாசி தொகுதி முடிவுகள் முதலில் தெரிய வாய்ப்பு உள்ளது.
அதேபோல் 29 சுற்றுகள் கொண்ட திருவண்ணாமலை தொகுதியின் முடிவு இரவு வெளியாகலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
