உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் கொலை :

உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் கொலை :
Updated on
1 min read

உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்டார்.

உளுந்தூர்பேட்டையை அடுத்தஆசனூர் காட்டுக்கொட்டகை கிராமத்தைச் சேர்ந்த பழனியாப்பிள்ளை மகள்பிரேமா(20). இவர் இரு தினங்களுக்கு முன் வீட்டின் அருகே உள்ள தோட்டத்திற்கு நடந்து சென்றார்.

அப்போது, அடையாளம் தெரியாத இரு நபர்கள், அவரை வெட்டிவிட்டு தப்பியோடினர். பலத்த காயமடைந்த பிரேமாசென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இந்தக் கொலை தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேமாவுடன் நட்பில் இருந்த சின்னசேலம் இளைஞர் மற்றும் செல்போன் உரையாடல்களை சேகரித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in