பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு :

பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு :
Updated on
1 min read

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2006-ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வுநீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாதற்கான காரணம்குறித்து அவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 14-ம்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in