கள்ளக்குறிச்சி அருகே - சாராயம் விற்ற 3 பேர் கைது :

கள்ளக்குறிச்சி அருகே -  சாராயம் விற்ற 3 பேர் கைது  :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள க.அலம்பலம் பகுதியைச் சேர்ந்த கீதா அவரது வீட்டின் பின்புறத்தில் தொடர்ந்து சாராயம் விற்று வருவதாக காவல்துறையினருக்கு புகார் வந்தது.

இதையடுத்து கச்சிராயபாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த கீதா கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கெனவே சாராய வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இவர் தொடர்ந்து பத்து ஆண்டுகள் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதேபோல் வடக்கநந்தல் பகுதியைச் சேர்ந்த லட்சுமி, பைத்தந்துறை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

3 பேரிடம் இருந்தும் சாராய பாக்கெட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in