Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM
மதுரை திருநகரில் காலியிடத்தில் கிடந்த துப்பாக்கியைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநகரிலுள்ள அண்ணா பூங்கா அருகே காலியிடத்தில் நேற்று காலை துப்பாக்கி ஒன்று கிடந்தது.
இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் திருநகர் போலீஸா ருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் துப்பாக்கியைக் கைப்பற்றி விசாரணை நடத் தினர். இதில் அது ஏர்கன் துப் பாக்கி எனத் தெரியவந்தது. அது சேதமடைந்து இருந்ததால் வீசிச் சென்றிருக்கலாம் எனத் தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT