Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM

தடுப்பூசி பற்றாக்குறை இல்லை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தலைமை தடுப்பூசி மையமான மாநகராட்சி இளங்கோ மேல்நிலை பள்ளியில் இரண்டாம் தவணை தடுப்பூசியை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று செலுத் திக்கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறி யதாவது:

தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடையே நம்பிக்கை ஏற்பட் டுள்ளது. அதனால், தாமாகவே முன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்த நெருக் கடியான காலத்தில் மருத்துவர் கள், காவல்துறை உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் மகத்தான சேவை செய்து வருகிறார்கள். கரோனா தொற்றைக் கண்டறிய அதிக அளவில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. தடுப்பூசி பற்றாக்குறை இல்லை.

கருத்துக் கணிப்புகள் தமி ழகத்தில் வெற்றி பெற்றதி ல்லை. 2016-ல் திமுக அதிக இடங் களில் வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியானது. ஆனால், அதிமுக வெற்றி பெற் றது.

தற்போதும் வந்துள்ள கருத்துக் கணிப்புகளால் திமுக இன்னும் ஒரு நாள் மகிழ்ச்சியாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x