Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM

கருத்து கணிப்பைவிட திமுக மகத்தான வெற்றி பெறும்: எம்எல்ஏ நம்பிக்கை :

மதுரை மருத்துவக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிடிஆர்.பழனிவேல்தியாகராஜன் எம்எல்ஏ.

மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பிடிஆர்.பழனிவேல்தியாகராஜன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒரு மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடப்பதால், அதன் முடிவுக்காக தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை ஒரு மாதத்துக்கு தள்ளிவைப்பது ஜனநாயக நடைமுறைக்கு உகந்ததல்ல. இந்நிலையிலும், பல்வேறு அசா தாரண சூழ்நிலைக்கு மத்தியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கட்சியினர் மிகக் கவனமாகப் பாதுகாத்து வருகின்றனர்.

கடந்த தேர்தலின்போது பதிவான வாக்குகளின் விவரங்கள் அடங்கிய படிவம் 17-சி, எண்ணி முடிக்கப்பட்ட வாக்குகளின் விவரம் அடங்கிய படிவம் 20 ஆகியவற்றில் வாக்குகளின் புள்ளிவிவரங்களில் வேறுபாடுகள் இருந்தன. இதில் தற்போது தவறு இருக்கக்கூடாது என்பதற்காக மாநில திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் என்ற முறையில் அந்த படிவங்களை தேர்தல் ஆணையத்திடம் வாங்கி வாக்குகள் பதிவாகி உள்ள விவரங்களை சரிபார்க்க நடவடிக்கை எடுத்துள்ளேன். கருத்துக் கணிப்பையும் கடந்து திமுக மகத்தான வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x