Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
மதுரை திருமங்கலம் அருகே கல்லூரித் தலைவரின் பெயரைப் பயன்படுத்தி போலி முகநூல் ஐடி மூலம் ரூ.2 கோடி முறைகேடு செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருமங்கலம் அருகே ஆலம் பட்டியில் அன்னை பாத்திமா கலை, அறிவியல் கல்லூரி உள்ளது. இதன் தலைவராக ஜாகீர்ஷா (53) உள்ளார். இவரது பெயரில் போலி முகநூல் ஐடி தொடங்கிய மர்ம நபர்கள், அதன் வழியாக மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங் களைப் பெற்றுள்ளனர். மேலும் ஆன்லைன் வங்கிக்கணக்கில் பண த்தைச் செலுத்தக் கூறியுள்ளனர்.
இதன் மூலம் 2019-ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.2 கோடி வரை முறைகேடு நடந்தி ருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கல்லூரித் தலைவர் ஜாகீர் ஷா மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்..
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT