Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

71 மூட்டை புகையிலைப் பொருட்கள் சேலத்தில் பறிமுதல்; 2 பேர் கைது :

சேலம்: கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரியில் கடத்தி வந்த 71 மூட்டை புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டூர் அடுத்த கொளத்தூர் பகுதிக்கு உட்பட்ட காரைக்காடு சோதனைச் சாவடியில் சிறப்பு எஸ்ஐ நாகராஜ் தலைமையிலான போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த லாரியை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர்.

சோதனையில், லாரியில் 71 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக தென்காசியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜேம்ஸ் ராஜா (26) மற்றும் லாரியில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம் தண்டராயம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x