Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

திருச்சி மண்டலத்தில் மே 14 வரை பாஸ்போர்ட் சேவை மையங்கள் மூடல் :

திருச்சி: திருச்சி மண்டலத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்கள் மே 14-ம் தேதி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஆர்.ஆனந்த் தெரிவித்துள்ளது:

இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி, திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின்கீழ் செயல்படும் அனைத்து பாஸ்போர்ட் சேவை மையங்களும் மே14-ம் தேதி வரை மூடப்படுகிறது. இந்நாட்களில் இங்கு சேவை பெற விண்ணப்பித்திருந்த நபர்கள், தங்களது முன்பதிவு நேரத்தை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கும், பொது விசாரணை, விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, காவல்துறை விசாரணை அறிக்கை குறித்த தகவல்களுக்கும் 1800-258-1800 என்ற கட்டணமில்லா எண்ணிலோ, 0431-2707203, 2707404 ஆகிய தொலைபேசி எண்களிலோ, 75985 07203 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது rpo.trichy@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x