Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
தென்காசி: தென்காசி மாவட்டம், புளியங்குடி, டி.என்.புதுக்குடியைச் சேர்ந்த ராமையா என்பவரது மகன் தங்கம் (20). இவர், புளியங்குடி கோவிந்தபேரி குளத்தில் நண்பர்களுடன் குளித்துள்ளார். குளத்தில் நீண்ட தூரம் நீந்திச் சென்றதால் மூச்சுத்திணறி நீரில் மூழ்கி விட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் தங்கம் உடல் மீட்கப்பட்டது. இது தொடர்பாக புளியங்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT