Published : 30 Apr 2021 03:13 AM
Last Updated : 30 Apr 2021 03:13 AM

கத்தாரில் உயிரிழந்தவர் உடலை சிதம்பரம் கொண்டு வர கோரிக்கை :

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது குடும்பத்தினர் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளனர்.

சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி(25) என்பவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கத்தார் நாட்டில் ஹோட்டல் வேலைக்கு சென்றார்.

அங்கு அவர் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்த நிலையில், கடந்த 24-ம்தேதி ஒருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீரமணி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவருடன் வேலை செய்பவர்கள் இதுகுறித்து வீரமணி குடும்பத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இத்தகவல் அறிந்த வீரமணியின் குடும்பத்தினரும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். வீரமணியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாயார் வீரச்செல்வி மற்றும் கிராம மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் சார் ஆட்சியர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x