மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தேனியை சேர்ந்தவர் உயிரிழப்பு :

மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தேனியை சேர்ந்தவர் உயிரிழப்பு :
Updated on
1 min read

தேனி மாவட்டம், சுருளிபட்டியைச் சேர்ந்தவர் கண்ணன்(35). இவர், கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

விசாரணை கைதியான இவருக்கு ஏற்கெனவே காச நோய் இருந்தது. மதுரை அரசு மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in