Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:17 AM
நாமக்கல்: திருச்செங்கோட்டில் அனுமதியின்றி செயல்பட்ட 3 மசாஜ் நிலையங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
திருச்செங்கோட்டில் அனுமதியின்றி மசாஜ் நிலையங்கள் இயங்கி வருவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக திருச்செங்கோடு துணை வட்டாட்சியர் சரவணக்குமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திருச்செங்கோடு பரமத்தி சாலையில் 3 கேரள மசாஜ் நிலையங்கள் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இவற்றை துணை வட்டாட்சியர் சரவணக்குமார் தலைமையிலான அதிகாரிகள் உத்தரவின்படி 3 மசாஜ் நிலையங்களையும் பூட்டி சீல் வைத்தனர். மேலும், அனுமதியின்றி இதுபோன்ற மசாஜ் நிலையங்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT