குளத்தில் மூழ்கி : சிறுவன் உட்பட : 2 பேர் உயிரிழப்பு :

குளத்தில் மூழ்கி : சிறுவன் உட்பட : 2 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

விருதுநகர் அருகே உள்ள கடம்பன்குளத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (24). அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் மோகனுக்கு (11) நீச்சல் கற்றுத்தர கடம்பன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள கண்மாய்க்கு சென்றுள்ளார்.

நீச்சல் கற்றுக்கொடுத்தபோது சிறுவன் ஆழமான பகுதிக்குச் சென்றார். அவரைக் காப்பாற்ற சுந்தரமூர்த்தியும் சென்றார். இருவரும் நீரில் மூழ்கி உயி ரிழந்தனர். கிராம மக்கள் நீண்ட நேரம் போராடி இருவரின் உடல்களையும் மீட்டனர். இது குறித்து சூலக்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in