Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM
முழுநேர ஊரடங்கு நாளான நேற்று ஆதரவற்றோர், ஏழை, எளியோர் தங்கள் பசியைப் போக்கிக்கொள்ள அம்மா உணவகங்கள் பெரிதும் உதவின.
திருச்சி மாநகரில் ஜங்ஷன் ராக்கின்ஸ் சாலை, ரங்கம் அம்மா மண்டபம் சாலை, ரங்கம் அரசு மருத்துவமனை, ஜான் பஜார், கீழரண் சாலை, மரக்கடை குப்பாங்குளம், அரியமங்கலம் ஜெகநாதபுரம், கல்கண்டார் கோட்டை, தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை, புத்தூர் ஈவெரா சாலை, உறையூர் சாலை ரோடு ஆகிய 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த உணவகங்களில் காலை வேளையில் இட்லி ரூ.1-க்கும், பிற்பகலில் தயிர் சாதம் ரூ.3-க்கும், சாம்பார் அல்லது பல்வகை சாதம் ரூ.5-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக் கையாக முழுநேர ஊரடங்கு நேற்று அமலில் இருந்ததால் சாலையோர உணவகங்கள், டீ கடைகள், பெட்டிக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், திறக்கப்பட்டிருந்த சில ஹோட்டல்களிலும் தனியார் உணவு நிறுவன செயலி மூலம் முன்பதிவு செய்த வர்களுக்கு மட்டுமே உணவு பார்சலாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஆதரவற்றோர் மற்றும் ஏழை, எளியோருக்கு வழக்கம்போல, மிகக் குறைந்த விலையில் உணவு வழங்கி அம்மா உணவகங்கள் பேருதவியாக இருந்தன. மாநகரில் உள்ள 11 அம்மா உணவகங்களிலும் சமூக இடைவெளியுடன் உணவருந்த மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
குறிப்பாக, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் ஏற முந்தைய நாள் இரவில் இருந்து காத்திருந்தவர்களும், திருச்சிக்கு ரயிலில் வந்திறங்கி அங்கிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல போக்கு வரத்து வசதி இல்லாமல் ரயில் நிலைய வளாகத்திலேயே காத்திருந்தவர்களும் ஜங் ஷன் ராக்கின்ஸ் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் உணவருந்தி சென்றனர்.
இதேபோல, மற்ற உணவகங்களிலும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளியோர் மற்றும் பயணிகள் உணவருந்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT