Published : 25 Apr 2021 06:10 AM
Last Updated : 25 Apr 2021 06:10 AM

காவல் துறையினருக்கு ஆயுதங்களை கையாள பயிற்சி :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் துறையினருக்கு ஆயுதங்களை கவனமாக கையாள்வது குறித்த பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.

ராணிப்பேட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் காவல் துறையினர் பல்வேறு வகையாக ஆயுதங் களை பாதுகாப்பான முறையில் கையாள்வது குறித்த பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.

வேலூர் சரக டிஐஜி காமினி உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் தொடங்கி வைத்தார்.

இதில், துணை காவல் கண்காணிப்பாளர்கள் பூரணி (ராணிப்பேட்டை), மனோகரன் (அரக்கோணம்) ஆகியோர் மேற்பார்வையில் 9 காவல் ஆய்வாளர்கள், 15 உதவி ஆய்வாளர்கள், 219 காவலர்கள் உள்ளிட்ட 245 பேர் பங்கேற்றனர்.

வேலூர் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பாபு தலைமையிலான குழுவினர் காவல் துறையினர் பயன்படுத்தி வரும் ஆயுதங்களை பாதுகாப்பான முறையில் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x