Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM

கடலூர் மாவட்டத்தில் இரவு ஊரடங்கை மீறிய 86 பேர் மீது வழக்கு :

கடலூர் மாவட்டத்தில் இரவு ஊரடங்கை மீறிய 86 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும் அமல் படுத்தப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் இரவு ஊரடங்கை மீறிய 86 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 43 இருசக்கர வாகனம், 2 மூன்று சக்கர வாகனம், 7 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 2-ம் அலையில் முகக்கவசம் அணியாத 13 ஆயிரத்து 751 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 230 பேருக்கும் மொத்தமாக ரூ. 27 லட்சத்து 67 ஆயிரத்து 150 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x