சங்கரன்கோவில் அருகே - ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டம் :

சங்கரன்கோவில் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள்.
சங்கரன்கோவில் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள்.
Updated on
1 min read

கரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே வேலை வழங்கப்படும் என்ற உத்தரவை கண்டித்து சங்கரன்கோவில் அருகே மகாத்மா காந்திஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை பார்க்கின்றனர்.

இவர்களிடம் கரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே வேலை வழங்கப்படும் என்றும், தடுப்பூசி போடாவிட்டால் வேலை வழங்கப்படாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்குபுதூரில் தொழிலாளர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு கருதிதடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்றும், இதனால் பாதிப்பு ஏற்படாது என்றும் அதிகாரிகள் கூறினர்.இதை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் சிறிது நேரம் போராட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in