வள்ளலார் சபையில் பாட்டுமன்றம் :

வள்ளலார் சபையில் பாட்டுமன்றம்  :
Updated on
1 min read

தி.மலை அடுத்த வேட்டவலம் வள்ளலார் சபையில் கருத்துக்கள் அதிகம் உள்ளவை ‘பழைய பாடல்களா, புதிய பாடல்களா’ எனும் தலைப்பில் பாட்டு மன்றம் நடைபெற்றது.

சபைத் தலைவர் மனோன் மணி தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் வாசுதேவன், பாடகி ஜெயசித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சபை செயலாளர் பச்சையம்மாள் வரவேற்றார். பாட்டு மன்ற நடுவராக நிர்வாகி ராமு செயல்பட்டார்.

பழைய பாடல்கள் எனும் தலைப்பில் பாவலர் குப்பன், தேவிகாராணி, ஐயப்பன், டேவிட் ஆகியோரும் புதிய பாடல்கள் எனும் தலைப்பில் பாபு தரணி, சவுமியா, சிவக்குமார், ரமாதேவி ஆகியோர் பங்கேற்று பாடினர். இதில், கருத்துக்கள் அதிகம் உள்ளது பழைய பாடல்கள்தான் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

முன்னதாக, ஆசிரியை சுலோச்சனா தலைமையில் கிருஷ்ணசாமி மற்றும் ராமஜோதி குழுவினர் தேவார பாடல்களை பாடினர். முடிவில், சரவணன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in