Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM

உரம் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்

உரம் விலை உயர்வை கண்டித்து விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரம் ஆட்சியர் அலுவ லகம் எதிரே நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சவுரிராஜன், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், மாவட்ட செயலாளர் அப்பாவு உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டங்களில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x