விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு :

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு :
Updated on
1 min read

கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூ சிகள் போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கப்பட்டது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் குறிப்பிட்ட 3 தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை கோவாக்ஸின் 5,608 பேருக்கும், கோவிஷீல்டு 77,369 பேருக்கும் போடப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக இரண்டு தடுப்பூசிகளும் இருப்பு இல்லாததால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

இதுகுறித்து சுகாதாரத்துறை வட்டாரங்களில் கேட்டபோது,"சென்னைக்கு தெரியப்படுத்தியுள் ளோம். விரைவில் தடுப்பூசி வந்துவிடும். அதன்பின் அனை வருக்கும் போடப்படும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in