தோரணமலையில் தாய், மகள் மரணம் :

தோரணமலையில் தாய், மகள் மரணம்  :
Updated on
1 min read

கடையம் அருகே உள்ள பால்வண்ணநாதபுரத்தைச் சேர்ந்தவர் தேவபுத்திரன். இவரது மனைவி லெட்சுமி தேவி (39). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் லெட்சுமி தேவி தனது 7 வயது மகள் மணிசா என்பவரை அழைத்துக்கொண்டு, தோரணமலை முருகன் கோயிலுக்குச் சென்றுள்ளார். அதன்பின் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால், தேவ புத்திரன் தனது உறவினர்களுடன் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளார்.

நேற்று காலையில் கோயிலு க்குச் சென்று தேடினர். அப்போது, மலையின் வடக்கு பகுதியில் 2 பேரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை மீட்டனர். கடையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in