Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : திருக்கோவிலூர் அருகே 4 பேர் பிடிபட்டனர்

மணலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த நபரை காவல்துறையினர் பிடித்துவிசாரித்த போது, அவர்களிடம் 2 சாக்கு பைகளில் சுமார் 3 ஆயிரம் புகையிலைப் பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் திரு வண்ணாமலை மாவட்டம் தண் டராம்பட்டைச் சேர்ந்த சரத்குமார் (30), கார்மேகம் (20) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், மணலூர்பேட்டையை அடுத்த விளந்தை கிராம பேருந்துநிறுத்தம் அருகே இளங்கோ என்பவரிடம் இருந்து 1,200 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருட் களையும், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையப் பகுதியில் பேருந்து புகையிலைப் பொருட்களை எடுத்துவந்த இதிரிஷ் என்பவரிடமிருந்து 60 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த னர்.

இவர்களிடமிருந்து பறிமுதல்செய்த புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 15 ஆயி ரத்து 200. தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனைக்காக கொண்டுவந்த 4 பேரையும் போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்த புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ.1,15,200. விற்பனைக்காக கொண்டுவந்த 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x