Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM

குடும்பத் தகராறில் தீக்குளிப்பு: தாயைத் தொடர்ந்து குழந்தையும் உயிரிழப்பு :

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே குடும்பத்தகராறு காரணமாக இரட்டை குழந்தைகளுடன் தாய் தீக்குளித்த சம்பவத்தில், தாயைத் தெடர்ந்து ஒரு குழந்தை நேற்று உயிரிழந்தது.

தா.பழூர் அருகே உள்ள பூவந்திகொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி மகேஸ்வரி(29), குடும்பத் தகராறு காரணமாக தனது, 2 வயதுடைய இரட்டை குழந்தைகளான தர்ஷன், தர்ஷினியுடன் நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.

இதில், மகேஸ்வரி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 2 குழந்தைகளும், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் தர்ஷினி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மற்றொரு குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தா.பழூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x