Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM

தோவாளையில் போராட்டம் :

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்,இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்துவதற்கான தவணை முடிந்தும், தட்டுப்பாட்டால் செலுத்த முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். தோவாளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தடுப்பூசி செலுத்தச் சென்ற பலர், தட்டுப்பாட்டால் ஏமாற்றமடைந்தனர். இதனால் தோவாளை ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன் தலைமையில் ஆரம்ப சுகாதார நிலையம் முன்புபோராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி துணைத் தலைவர் தாணு மற்றும் பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x