திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் - டாஸ்மாக் கடைகளை 2 நாட்கள் மூட உத்தரவு :

திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில்  -  டாஸ்மாக் கடைகளை 2 நாட்கள் மூட உத்தரவு  :
Updated on
1 min read

மகாவீரர் ஜெயந்தி நாளான வரும் 25-ம் தேதி மற்றும் உழைப்பாளர் தினமான வரும் மே 1-ம் தேதியில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுக் கூடங்களை மூட தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிஉத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதியின் கீழ் மகாவீரர் ஜெயந்தி நாளான வரும் 25-ம் தேதி மற்றும் உழைப்பாளர் தினமான மே மாதம் 1-ம் தேதி, தி.மலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும். மேலும், மதுக்கூடங்கள், எப்எல்-1, எப்எல்-2,எப்எல்-3, எப்எல்-3ஏ, எப்எல்-3ஏஏ மற்றும் எப்எல்-11 உரிமம் பெற்ற உணவகங்களில் உள்ள மதுக் கூடங்கள் மற்றும் எப்எல்4-ஏ உட்பட அனைத்து மதுபானக் கூடங்கள் மற்றும் கடைகளில் மதுபானம் விற்பனை செய்யாமல் மூடி வைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்,

ராணிப்பேட்டை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in