செஞ்சி அருகே  -  உடலை புதைக்க எதிர்ப்பு :

செஞ்சி அருகே - உடலை புதைக்க எதிர்ப்பு :

Published on

செஞ்சி அருகே திருவம்பட்டு கிராமத்தில் கரோனா சிகிச்சை முடிந்து திரும்பியவர் உயிரிழந்த நிலையில் உடலை புதைக்க அக்கிராம மக்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

செஞ்சியை அடுத்த திருவம் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னையில் கருவாடு வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கரோனா சிசிச்சை முடிந்து குணமான நிலையில் 4 தினங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென உயிரிழந் துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை அதே ஊரில் உள்ள இடுகாட்டில் புதைக்க கொண்டு சென்றனர். அப்போது, அக்கிராம மக்கள் சிலர் கரோனா பாதித்த நபரை புதைக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து செஞ்சி போலீஸார் தலையிட்டு கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, புதைக்க அனு மதித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in