மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் :

மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் :
Updated on
1 min read

விழாக்களில் மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என விழுப்புரம் எஸ்பியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நேற்று விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தற்போது வரை ஒரு ஆண்டாக கரோனா தொற்று காரணமாக மேடை மெல்லிசை நிகழ்ச்சிகள் எங்கும் நடைபெறவில்லை. கோயில் திருவிழா, திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் எங்களது இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டது.

இத்தொழிலை நம்பியுள்ள குடும்பத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்கள் தொழில் நடைபெறும் வகையிலும், கரோனா தொற்று கட்டுப்பாட்டுடன், சமுக இடைவெளியுடன் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in