இளைஞர் மர்ம மரணம் :

இளைஞர் மர்ம மரணம் :
Updated on
1 min read

எலச்சிபாளையம் அருகே மர்மமான முறையில் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செங்கோடு அடுத்த எலச்சிபாளையம் அம்மாசிப்பட்டி அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் சரவணன் (40). இவரது மனைவி காமாட்சி. 2 மகள்கள் உள்ளனர். புகைப்பட கலைஞரான சரவணன் நில அளவை செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், அவர் நேற்று அதிகாலை வீட்டருகே உள்ள புதரில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற எலச்சிபாளையம் போலீஸார், பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சரவணனின் தலை மற்றும் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in