கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு  :

கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு :

Published on

குமாரபாளையம் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த நாயை, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

குமாரபாளையம் அடுத்த ஆந்திராகாரர் லைன் வீடு பகுதியில் தண்ணீர் இல்லாத 30 அடி கிணறு உள்ளது. இக்கிணற்றில் நேற்று முன்தினம் இரவு அவ்வழியே சென்ற தெரு நாய் தவறி கிணற்றில் விழுந்தது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் குமாரபாளையம் தீயணைப்புப் மீட்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி நாயை உயிருடன் மீட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in