Published : 14 Apr 2021 03:15 AM
Last Updated : 14 Apr 2021 03:15 AM

புதுக்கோட்டையில் ஒரு டன் குட்கா பறிமுதல் :

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி மார்க்கெட் அருகே அப்துல் சலாம் என்பவரது வீட்டில், திட்டமிட்ட குற்றத்தடுப்பு நுண்ணறிவு போலீஸார் நேற்றுமுன்தினம் இரவு சோதனையிட்டனர்.

அப்போது, அவரது வீட்டிலிருந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு டன் அளவிலான 20 மூட்டை குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றை புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தலைமறைவாகிய அப்துல் சலாமை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x