கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் - 253 பேருக்கு கரோனா தொற்று :

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி  மாவட்டங்களில்  -  253 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் இதுவரையில் இம்மாவட்டத்தில் 15,999 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 15, 493பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 393 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரையில் 113 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 157 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்களையும் சேர்த்து, இதுவரையில் இம்மாவட்டத்தில் 26,726 பேருக்கு கரோன தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று வரை 25,588 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கடலூர் மாவட்ட மருத்துவமனைகளில் 591பேரும், இதர மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 255 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 292 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாவட்டத்தில் உயிரிழப்பு இல்லை.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in