குறிஞ்சிப்பாடியில் கிணற்றை - தூர்வாரியவர் சகதியில் சிக்கி உயிரிழப்பு :

குறிஞ்சிப்பாடியில் கிணற்றை -  தூர்வாரியவர் சகதியில் சிக்கி உயிரிழப்பு :
Updated on
1 min read

குறிஞ்சிப்பாடியில் கிணற்றை தூர் வாரியவர் சகதியில் சிக்கி உயிரிழந்தார்.

குறிஞ்சிப்பாடி ரெட்டியார் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கராஜ். போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள கிணற்றை தூர்வார முடிவு செய்தார். இதனையெடுத்து நேற்று காலை அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (50), கொளஞ்சி (48) இருவரும் கிணறு தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப் போது முருகன் கிணற்றின் உள்ளேசகதியில் சிக்கினார். அவருடன் இருந்த கொளஞ்சி அவரை காப் பற்ற முயன்றார்.

காப்பாற்ற முடியாததால் கொளஞ்சி கிணற்றிலிருந்து வெளியே வந்து விட்டார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி முருகனை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கொளஞ்சியும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு விசா ரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in