விஷவண்டு கடித்து முதியவர் உயிரிழப்பு :

விஷவண்டு கடித்து முதியவர் உயிரிழப்பு :
Updated on
1 min read

பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியன் (80). விவசாயி. அவர் நேற்று வண் ணாரப்பாளையத்தில் உள்ள முந்திரி தோப்பு பகுதிக்கு சென் றுள்ளார். அப்போது மரத்தில் இருந்த விஷ வண்டுகள் அவரை கடித்துள்ளது. இதில் காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற குடும்பத்தினர் அவரை மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சந்தானம் அளித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in