சத்திரக்குடி அருகே கார் கவிழ்ந்து முதியவர் மரணம் : 7 பேர் காயம்

சத்திரக்குடி அருகே  கார் கவிழ்ந்து முதியவர் மரணம் :  7 பேர் காயம்
Updated on
1 min read

சத்திரக்குடி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்களின் கார் கவிழ்ந்ததில் முதியவர் உயிரிழந்தார். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே வேந்தோணி கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி. இவர் தனது பெரியப்பா பூதன் மற்றும் உறவினர்களுடன் ஒரு காரில் சத்திரக்குடி அருகே அரியகுடி புத்தூரில் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு காரில் சென்றார்.

அப்போது மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அரியகுடி புத்தூர் விலக்கு ரோடு அருகே கார் சென்றபோது, மழை பெய்ததால் பிரேக் பிடிக்காமல் திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் பூதன் (70) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கணபதி (40), அவரது மனைவி அக்னேஸ்வரி (38), மகன்கள் தினேஷ்பாபு (18), ஷியாம்(9), உறவினர் குமார் என்பவரது மனைவி பூமயில் (40), ராஜீவ்காந்தி மனைவி ராமலெட்சுமி, கார் ஓட்டுநர் தாமரைச்செல்வன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சத்திரக்குடி போலீஸார் கார் ஓட்டுநர் தாமரைச் செல்வன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in