வீடுகளுக்கு சென்று கபசுர குடிநீர் வழங்கல் :

வீடுகளுக்கு சென்று கபசுர குடிநீர் வழங்கல்  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு, மழை நண்பர்கள் குழு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தினந்தோறும் பொதுமக்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று கபசுர குடிநீர் வழங்கும் பணியை தொடங்கியுள்ளது. நேற்று செங்கோட்டை மேலூர் பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 356 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இப்பணியை செங்கோட்டை அரசு சித்த மருத்துவர் கலா தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் மழை நண்பர்கள் குழுவினர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in