ஆசிட் குடித்த மூதாட்டி உயிரிழப்பு :

ஆசிட் குடித்த மூதாட்டி உயிரிழப்பு  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், சிவகிரியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மனைவி ராமலெட்சுமி (65). இவர், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக சிகிச்சை எடுத்தும் குணமாகாததால், விரக்தியில் குளியல் அறையை கழுவ பயன்படுத்தும் ஆசிட்டை குடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர், சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிவகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in